பொள்ளாச்சி: 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி: 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த லாரி டிரைவர் மகன் தினேஷ் (19). தனது தந்தைக்கு உதவியாக வேலை செய்து வந்த தினேஷுக்கும் 16 வயது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறுமியை ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் பொள்ளாச்சி தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், கோபாலபுரம் அருகே பதுங்கியிருந்த தினேஷை கைது செய்தனர். விசாரணையில், சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோபிசெட்டிப்பாளையம் சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த லாரி டிரைவர் மகன் தினேஷ் (19). தனது தந்தைக்கு உதவியாக வேலை செய்து வந்த தினேஷுக்கும் 16 வயது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறுமியை ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் பொள்ளாச்சி தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், கோபாலபுரம் அருகே பதுங்கியிருந்த தினேஷை கைது செய்தனர். விசாரணையில், சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோபிசெட்டிப்பாளையம் சிறையில் அடைத்தனர்.