கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழக கவர்னர் பிரசித்திபெற்ற தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோவிவில் சுவாமி தரிசனம் செய்தார்.
கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழக கவர்னர் பிரசித்திபெற்ற தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோவிவில் சுவாமி தரிசனம் செய்தார்.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் 41-வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை பிரசித்திபெற்ற தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்த ஆளுநருக்கு கோவில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து சுவாமி தரிசனம் செய்த கவர்னர் கோவில் பிரகாரத்தைச் சுற்றி வந்து வழிபாடு செய்தார். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள பசுவுக்கு தீவனம் வழங்கிய அவர் கோவில் யானையான கல்யாணியிடம் ஆசி பெற்றார். ஆளுநரின் பேரூர் வருகை காரணமாக சிறுவாணி சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் 41-வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை பிரசித்திபெற்ற தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்த ஆளுநருக்கு கோவில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து சுவாமி தரிசனம் செய்த கவர்னர் கோவில் பிரகாரத்தைச் சுற்றி வந்து வழிபாடு செய்தார். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள பசுவுக்கு தீவனம் வழங்கிய அவர் கோவில் யானையான கல்யாணியிடம் ஆசி பெற்றார். ஆளுநரின் பேரூர் வருகை காரணமாக சிறுவாணி சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.