கோவை: காட்டு யானை தாக்கியதில் இரவுக் காவலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: காட்டு யானை தாக்கியதில் இரவுக் காவலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான பொன்னூத்து மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி மலையடிவாரப் பகுதிகளுக்குள் அவ்வப்போது புகுந்து விடுவது வழக்கம்.
பன்னிமடையில் இருந்து வரப்பாளையம் செல்லும் வழியில் ஸ்ரீ நகர் பகுதியில் ஹாலோ பிளாக் கல் கம்பெனி ஒன்று உள்ளது. நேற்று இரவுப் பணிக்காக காவலாளி ஒருவர் இரவு 10 மணி அளவில் அந்தப்பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானை ஒன்று தலையில் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்த நபர் கோவை சின்ன தடாகம் மாரியம்மன் கோயில் வீதி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (வயது 63) என்பது தெரியவந்தது. இவரது மனைவி பிரேமா ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகனும், புஷ்பா, சீதா என்ற மகள்களும் உள்ளனர். இந்தச் சம்பவம் அப் பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான பொன்னூத்து மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி மலையடிவாரப் பகுதிகளுக்குள் அவ்வப்போது புகுந்து விடுவது வழக்கம்.
பன்னிமடையில் இருந்து வரப்பாளையம் செல்லும் வழியில் ஸ்ரீ நகர் பகுதியில் ஹாலோ பிளாக் கல் கம்பெனி ஒன்று உள்ளது. நேற்று இரவுப் பணிக்காக காவலாளி ஒருவர் இரவு 10 மணி அளவில் அந்தப்பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானை ஒன்று தலையில் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்த நபர் கோவை சின்ன தடாகம் மாரியம்மன் கோயில் வீதி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (வயது 63) என்பது தெரியவந்தது. இவரது மனைவி பிரேமா ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகனும், புஷ்பா, சீதா என்ற மகள்களும் உள்ளனர். இந்தச் சம்பவம் அப் பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.