காட்டு யானை தாக்கி இரவுக் காவலாளி பலி!

கோவை: காட்டு யானை தாக்கியதில் இரவுக் காவலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை: காட்டு யானை தாக்கியதில் இரவுக் காவலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான பொன்னூத்து மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி மலையடிவாரப் பகுதிகளுக்குள் அவ்வப்போது புகுந்து விடுவது வழக்கம். 

பன்னிமடையில் இருந்து வரப்பாளையம் செல்லும் வழியில் ஸ்ரீ நகர் பகுதியில் ஹாலோ பிளாக் கல் கம்பெனி ஒன்று உள்ளது. நேற்று இரவுப் பணிக்காக காவலாளி ஒருவர் இரவு 10 மணி அளவில் அந்தப்பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானை ஒன்று தலையில் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்த நபர் கோவை சின்ன தடாகம் மாரியம்மன் கோயில் வீதி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (வயது 63) என்பது தெரியவந்தது. இவரது மனைவி பிரேமா ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகனும், புஷ்பா, சீதா என்ற மகள்களும் உள்ளனர். இந்தச் சம்பவம் அப் பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...