கோவை: கோவையில் பவுண்டரி தொழிற்கூடங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
கோவை: கோவையில் பவுண்டரி தொழிற்கூடங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
மூலப்பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.
இதுகுறித்து கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத் தலைவர் சிவசண்முக குமார் கூறியதாவது:-
மூலப்பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 400 பவுண்டரிகள் பங்கேற்றுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.30 கோடி வீதம் ரூ.60 கோடி உற்பத்தி இழப்பு பாதிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.