கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெட்ரோல் பங்கில் மேனேஜர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கள்ளக்காதலியுடன் சேர்ந்து பெண் போலீஸை அடித்து உதைத்து கொடுமை செய்தது தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
கோவை வெள்ளலூர் அருகே உள்ள மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி உமா (வயது 47). இவர் செல்வபுரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நானும் டிரைவராக வேலை பார்த்து வரும் ஆனந்தன் என்பவரும் கடந்த 2007ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் எனது கணவர் ஆனந்தன் சென்னையில் எனது பெயரில் உள்ள வீட்டை விற்றுவிட்டு கோவையில் வீடு வாங்க வேண்டுமென்று என்னைத் துன்புறுத்தினார். இதனால் எங்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதற்கிடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு எனது கணவருக்கு காங்கேயம்பாளையத்தைச் சேர்ந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மேலும் அவர் சரியாக வேலைக்குச் செல்லாமல் அந்தப் பெண்ணுடன் சுற்றி திரிந்தார். இதை தட்டிக்கேட்ட என்னை தாக்கிவிட்டு அந்தப் பெண்ணுடன் காங்கேயம்பாளையம் சென்று குடும்பம் நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் நான் வீட்டில் இருந்தபோது கள்ளக்காதலியுடன் வீட்டுக்கு வந்த எனது கணவர் மோட்டார் சைக்கிள் சாவியைத் தருமாறு கேட்டார். நான் கொடுக்க மறுத்ததால் அவரும் அந்தப் பெண்ணும் சேர்ந்து எனது குழந்தைகள் முன்னிலையில் என்னைத் தாக்கி, தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக அவர்கள் இரண்டுபேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். புகாரின்பேரில் பெண் போலீஸ் உமாவை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய அவரது கணவர் ஆனந்தன் மற்றும் ஆனந்தனின் கள்ளக்காதலி சித்ரா மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட சட்டத்தின்கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். இதையடுத்து ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சித்ராவை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை வெள்ளலூர் அருகே உள்ள மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி உமா (வயது 47). இவர் செல்வபுரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நானும் டிரைவராக வேலை பார்த்து வரும் ஆனந்தன் என்பவரும் கடந்த 2007ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் எனது கணவர் ஆனந்தன் சென்னையில் எனது பெயரில் உள்ள வீட்டை விற்றுவிட்டு கோவையில் வீடு வாங்க வேண்டுமென்று என்னைத் துன்புறுத்தினார். இதனால் எங்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதற்கிடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு எனது கணவருக்கு காங்கேயம்பாளையத்தைச் சேர்ந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மேலும் அவர் சரியாக வேலைக்குச் செல்லாமல் அந்தப் பெண்ணுடன் சுற்றி திரிந்தார். இதை தட்டிக்கேட்ட என்னை தாக்கிவிட்டு அந்தப் பெண்ணுடன் காங்கேயம்பாளையம் சென்று குடும்பம் நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் நான் வீட்டில் இருந்தபோது கள்ளக்காதலியுடன் வீட்டுக்கு வந்த எனது கணவர் மோட்டார் சைக்கிள் சாவியைத் தருமாறு கேட்டார். நான் கொடுக்க மறுத்ததால் அவரும் அந்தப் பெண்ணும் சேர்ந்து எனது குழந்தைகள் முன்னிலையில் என்னைத் தாக்கி, தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக அவர்கள் இரண்டுபேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். புகாரின்பேரில் பெண் போலீஸ் உமாவை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய அவரது கணவர் ஆனந்தன் மற்றும் ஆனந்தனின் கள்ளக்காதலி சித்ரா மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட சட்டத்தின்கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். இதையடுத்து ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சித்ராவை போலீசார் தேடி வருகின்றனர்.