பொள்ளாச்சி அருகே பெட்ரோல் பங்கில் மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை..! போலீசார் விசாரணை

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெட்ரோல் பங்கில் மேனேஜர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெட்ரோல் பங்கில் மேனேஜர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி கக்கொத்தி பாளையம், ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (47). இவர் பொள்ளாச்சி மார்க்கெட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மேனேஜராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், உதயகுமார் பெட்ரோல் நிறுவனத்திற்கு லோடுக்கான பணத்தை தாமதமாக செலுத்தி வந்ததாக தெரிகிறது. அதனால் பெட்ரோல் நிறுவனம் பங்குக்கு அனுப்ப வேண்டிய பெட்ரோலை நிறுத்தியுள்ளது. இதனால் உதயகுமார் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு விரக்தியடைந்த அவர், பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து 174 சட்டப்பிரிவின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...