கோவை: கோவை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஏற்றிவந்த மாருதி காரில் 300 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலையை கடத்தி வந்த இரண்டுபேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் தப்பி ஓட்டம் பிடித்தார்.
கோவை: கோவை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஏற்றிவந்த மாருதி காரில் 300 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலையை கடத்தி வந்த இரண்டுபேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் தப்பி ஓட்டம் பிடித்தார்.
கோவை கருமத்தம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அரவிந்தராஜ் தலைமையிலான போலீஸ் குழு நேற்று கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகர் டி.என்.எஸ்.டி..சி டிப்போ அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டில் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதில் மூன்று பேர் இருந்தனர். போலீசைக் கண்டதும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற இரண்டு பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திர குமார் (வயது 24) என்பது தெரியவந்தது. அவன் தற்சமயம் சோமனூர் கருமத்தம்பட்டி பகுதியில் வசித்து வருகிறான். தர்வேஷ் (வயது 35) என்பவன் மேட்டுப்பாளையம் டவர் ஆபீஸ் ரோட்டில் வசித்து வருகிறான். தப்பி ஓடியவனின் பெயர் மோதிலால் என்பது தெரியவந்தது.
கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் 300 கிலோ 10 மூட்டைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 3 லட்ச ரூபாய் ஆகும். கைது செய்யப்பட்டவர்களிடம் தப்பி ஓடிய நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தக் கும்பல் பொருட்களை மொத்த குடோனில் இருந்து எடுத்து வந்து கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கார் மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை கருமத்தம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அரவிந்தராஜ் தலைமையிலான போலீஸ் குழு நேற்று கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகர் டி.என்.எஸ்.டி..சி டிப்போ அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டில் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதில் மூன்று பேர் இருந்தனர். போலீசைக் கண்டதும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற இரண்டு பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திர குமார் (வயது 24) என்பது தெரியவந்தது. அவன் தற்சமயம் சோமனூர் கருமத்தம்பட்டி பகுதியில் வசித்து வருகிறான். தர்வேஷ் (வயது 35) என்பவன் மேட்டுப்பாளையம் டவர் ஆபீஸ் ரோட்டில் வசித்து வருகிறான். தப்பி ஓடியவனின் பெயர் மோதிலால் என்பது தெரியவந்தது.
கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் 300 கிலோ 10 மூட்டைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 3 லட்ச ரூபாய் ஆகும். கைது செய்யப்பட்டவர்களிடம் தப்பி ஓடிய நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தக் கும்பல் பொருட்களை மொத்த குடோனில் இருந்து எடுத்து வந்து கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கார் மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.