கோவை: வால்பாறையில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வனத்துறை சார்பாக நிதியுதவி வழங்கினார்.
கோவை: வால்பாறை பகுதியில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வனத்துறை சார்பாக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் நிதி உதவி வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் தற்போது காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. குடியிருப்புகள் மற்றும் ரேஷன் கடைகளை சேதப்படுத்தி வருகிறது.
இதனிடையே, கடந்த ஆண்டு வால்பாறை இஞ்சி பாறை எஸ்டேட்டில் ராதாகிருஷ்ணனை காட்டு யானை துரத்தி காயம் அடைந்ததால் இழப்பீட்டுத் தொகையாக 3000 ரூபாயும், காமராஜர் நகர் ராமர் என்பவருடைய கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்துக் கொன்றது.

சவரங்காடு எஸ்டேட்டை சேர்ந்த ராஜ் என்பவருடைய தோட்டத்தை அழித்து நாசம் செய்ததற்கு இருவருக்கும் இழப்பீடாக தலா ரூ.2000 வழங்கப்பட்டது.
இதனை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தமிழக அரசு, சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு மற்றும் வனத்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை வட்டாட்சியர் ராஜா, மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், வனவர் முனியாண்டி, நகர செயலாளர் மயில் கணேசன், தொழிற்சங்க தலைவர் வால்பாறை வி அமீது வாசு உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தற்போது காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. குடியிருப்புகள் மற்றும் ரேஷன் கடைகளை சேதப்படுத்தி வருகிறது.
இதனிடையே, கடந்த ஆண்டு வால்பாறை இஞ்சி பாறை எஸ்டேட்டில் ராதாகிருஷ்ணனை காட்டு யானை துரத்தி காயம் அடைந்ததால் இழப்பீட்டுத் தொகையாக 3000 ரூபாயும், காமராஜர் நகர் ராமர் என்பவருடைய கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்துக் கொன்றது.
சவரங்காடு எஸ்டேட்டை சேர்ந்த ராஜ் என்பவருடைய தோட்டத்தை அழித்து நாசம் செய்ததற்கு இருவருக்கும் இழப்பீடாக தலா ரூ.2000 வழங்கப்பட்டது.
இதனை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தமிழக அரசு, சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு மற்றும் வனத்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை வட்டாட்சியர் ராஜா, மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், வனவர் முனியாண்டி, நகர செயலாளர் மயில் கணேசன், தொழிற்சங்க தலைவர் வால்பாறை வி அமீது வாசு உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.