கோவை: கோவையில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவையில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை ரத்தினபுரி லே-அவுட் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி முருகேசன் (40). இவர் நேற்று மாலை வேடப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஒரு பெண் அவரை தடுத்து நிறுத்தி தன்னிடம் இளம் பெண்கள் இருப்பதாகவும், நீங்கள் ஆசைப்பட்டால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம், என்று அழைத்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், தான் சென்று பணம் எடுத்து வருவதாக கூறிச் சென்றார். பின்னர், இதுகுறித்து முருகேசன் வடவள்ளி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சாதாரண உடையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த பெண் ஆலந்துரை பகுதியை சேர்ந்த சுமதி (30), என்பதும், அதே பகுதியில் வீடு எடுத்து விபச்சாரம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அந்த வீட்டுக்குச் சென்று அங்கிருந்த 19 வயது இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து விபச்சார தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் புரோக்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.