கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா 8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா 8 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் சுற்றுலா தளங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திறக்க அனுமதி அளித்தது.
இதனையடுத்து, பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களை திறக்க நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆழியார் பூங்காவிற்கு குடும்பத்தினருடன் வந்தனர். பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவாயிலில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும், பூங்காவில் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து பொழுதைக் கழிக்க வேண்டும் உள்ளிட்ட அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுற்றுலா பயணிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

எட்டு மாதங்களுக்குப் பிறகு ஆழியார் அணை பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் சுற்றுலா தளங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திறக்க அனுமதி அளித்தது.
இதனையடுத்து, பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களை திறக்க நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆழியார் பூங்காவிற்கு குடும்பத்தினருடன் வந்தனர். பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவாயிலில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும், பூங்காவில் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து பொழுதைக் கழிக்க வேண்டும் உள்ளிட்ட அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுற்றுலா பயணிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
எட்டு மாதங்களுக்குப் பிறகு ஆழியார் அணை பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.