நீலகிரி: கூடலூர் அருகே பந்தலூரில் பொதுமக்களை தாக்கி வரும் காட்டு யானையை பிடிக்க மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி: கூடலூர் அருகே பந்தலூரில் பொதுமக்களை தாக்கி வரும் காட்டு யானையை பிடிக்க மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
கூடலூர் அருகே கொளப்பள்ளி, 10 லைன்ஸ் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் யூனியன் கவுன்சிலர் ஆனந்த் ராஜா மற்றும் அவரது மகன் பிரசாந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தனர்.

இந்நிலையில், பந்தலூரில் நேற்று மூவரை கொன்ற காட்டு யானை ரேம்பாடி புரோக்கன் டஸ்கர் என கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த காட்டு யானையை பிடிக்கும் பணியினை வனத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில், பொதுமக்களை தாக்கி வரும் காட்டு யானையைப் பிடிக்க கலீம், வசிம், பொம்மன் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க கால் நடை மருத்துவர் மனோகரன் உள்ளிட்ட 3 வன கால்நடை மருத்துவர்கள் அடங்கிய 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.
மேலும், காட்டு யானையை தேடும் பணியில் 4 வனத்துறை குழுக்கள் தற்போது ஈடுபட்டுள்ளது. இந்த யானை பிடிபட்டதும் முதுமலை முகாமிற்கு கொண்டு செல்லப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடலூர் அருகே கொளப்பள்ளி, 10 லைன்ஸ் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் யூனியன் கவுன்சிலர் ஆனந்த் ராஜா மற்றும் அவரது மகன் பிரசாந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தனர்.
இந்நிலையில், பந்தலூரில் நேற்று மூவரை கொன்ற காட்டு யானை ரேம்பாடி புரோக்கன் டஸ்கர் என கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த காட்டு யானையை பிடிக்கும் பணியினை வனத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில், பொதுமக்களை தாக்கி வரும் காட்டு யானையைப் பிடிக்க கலீம், வசிம், பொம்மன் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க கால் நடை மருத்துவர் மனோகரன் உள்ளிட்ட 3 வன கால்நடை மருத்துவர்கள் அடங்கிய 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.
மேலும், காட்டு யானையை தேடும் பணியில் 4 வனத்துறை குழுக்கள் தற்போது ஈடுபட்டுள்ளது. இந்த யானை பிடிபட்டதும் முதுமலை முகாமிற்கு கொண்டு செல்லப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.