திருப்பூர்: வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி 2-வது நாளாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்திந்திய விவசாயப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
திருப்பூர்: வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி 2-வது நாளாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்திந்திய விவசாயப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் தொடர்ந்து 19-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் திருப்பூரில் தினந்தோறும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று 2-வது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்திந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களை சாட்டையால் அடிப்பதுபோன்று நடித்துக் காட்டினர். நூதன முறையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் பார்த்துச் சென்றனர்.