வால்பாறையில் அதிகாலையில் யானைகள் அட்டகாசம்..! ரேஷன் கடை சேதம்..!

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது அய்யர் பாடி எஸ்டேட் இங்கு 600க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசின் நியாய விலைக்கடை மூலம் பொருட்களை வழங்குவதற்காக ரோப்வே பகுதியில் நியாயவிலைக் கடை ஒன்று இயங்கி வருகிறது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது அய்யர் பாடி எஸ்டேட் இங்கு 600க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசின் நியாய விலைக்கடை மூலம் பொருட்களை வழங்குவதற்காக ரோப்வே பகுதியில் நியாயவிலைக் கடை ஒன்று இயங்கி வருகிறது. 



பள்ளிக்கூடம் மற்றும் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த நியாயவிலைக் கடையை சுற்றி, இன்று அதிகாலையில் 5 காட்டு யானைகள் இப்பகுதியில் முகாமிட்டன. பின், நியாயவிலைக் கடையை முற்றுகையிட்ட காட்டுயானைகள்், கடையின் ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி பருப்பு போன்ற பொருட்களை தின்றும், தூக்கி வீசியும் சேதப்படுத்தின. இதன் காரணமாக கடையின், ஜன்னல்கள் கதவுகள் உடைந்து முற்றிலும் சேதமடைந்தன.



காட்டு யானைகளால் நியாயவிலைக்கடை உடைக்கப்படும் சத்தம் கேட்டு, அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு வனத்துறையினருடன் இணைந்து பல மணி நேரம் போராடி அந்த யானைகளை அங்கிருந்து விரட்டியடித்தனர். தொடர்ந்து, காட்டுயானைகள் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வருவதும், அங்குள்ள குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று இரவு மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் யானை கூட்டம் வருமோ? என்ற பயத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இதனால், வனத்துறையினர், அய்யர் பாடி மற்றும் ரோப்வே பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு காட்டு யானகளை கண்காணித்து வருகின்றனர் 

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...