பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர், பொள்ளாச்சி என இரண்டு கோட்டங்கள் ஆகவும் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, அமராவதி, உடுமலை என ஆறு வனச்சரகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர், பொள்ளாச்சி என இரண்டு கோட்டங்கள் ஆகவும் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, அமராவதி, உடுமலை என ஆறு வனச்சரகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, ராஜநாகம், பல்வேறு வகையான மான்கள் என பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்துக்குப் பிந்தைய, வன உயிரின கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அவ்வாறு, இந்த ஆண்டு வன உயிரின கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது. கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இன்று காலை பொள்ளாச்சி கோட்டம் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகளிலும், மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் கணக்கெடுப்பு தொடங்கியது. மொத்தம் நான்கு வனச்சரகங்களிலும் 62 நேர்கோட்டுப் பாதையில் கணக்கெடுப்புகள் துவங்கின.
இதில் மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகள் மற்றும் பல்வேறு வகையான உயிரினங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றன. நேரில் பார்க்கும் வன உயிரினங்கள், வன உயிரினங்களின் கால்தடங்கள், எச்சம், நகக்கீறல்கள் போன்றவையும் கணக்கிடப்படுகின்றன.
மேலும், வனப்பகுதிகளில் வன உயிரினங்களுக்கு ஏதாவது இடையூறுகள் உள்ளதா என்பது குறித்தும் கண்காணிக்கப்படும், என்றும், இன்று தொடங்கும் கணக்கெடுப்பு 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, ராஜநாகம், பல்வேறு வகையான மான்கள் என பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்துக்குப் பிந்தைய, வன உயிரின கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அவ்வாறு, இந்த ஆண்டு வன உயிரின கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது. கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இன்று காலை பொள்ளாச்சி கோட்டம் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகளிலும், மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் கணக்கெடுப்பு தொடங்கியது. மொத்தம் நான்கு வனச்சரகங்களிலும் 62 நேர்கோட்டுப் பாதையில் கணக்கெடுப்புகள் துவங்கின.
இதில் மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகள் மற்றும் பல்வேறு வகையான உயிரினங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றன. நேரில் பார்க்கும் வன உயிரினங்கள், வன உயிரினங்களின் கால்தடங்கள், எச்சம், நகக்கீறல்கள் போன்றவையும் கணக்கிடப்படுகின்றன.
மேலும், வனப்பகுதிகளில் வன உயிரினங்களுக்கு ஏதாவது இடையூறுகள் உள்ளதா என்பது குறித்தும் கண்காணிக்கப்படும், என்றும், இன்று தொடங்கும் கணக்கெடுப்பு 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.