கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது செய்த போலீசார் 13 சவரன் நகை ரூ.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது செய்த போலீசார் 13 சவரன் நகை ரூ.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல மாதங்களாக தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு மற்றும் வீடுகளில் கொள்ளையடிப்பது, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் திருடுவது என தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களை பிடிக்க கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில், பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், கோட்டூர் ரோடு - வஞ்சியாபுரம் பிரிவில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனையிட்ட போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, கோட்டூர் மலையாண்டிபட்டினத்தை சேர்ந்த சூரிய ஜெகதீஸ்(27), ரகுபதி(37), மல்லீஸ்வரன்(31), சபரிநாதன்(24) உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 13 சவரன் தங்க நகைகள், மூன்று இருசக்கர வாகனங்கள், ஒரு ஆம்னி கார் மற்றும் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல மாதங்களாக தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு மற்றும் வீடுகளில் கொள்ளையடிப்பது, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் திருடுவது என தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களை பிடிக்க கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில், பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், கோட்டூர் ரோடு - வஞ்சியாபுரம் பிரிவில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனையிட்ட போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, கோட்டூர் மலையாண்டிபட்டினத்தை சேர்ந்த சூரிய ஜெகதீஸ்(27), ரகுபதி(37), மல்லீஸ்வரன்(31), சபரிநாதன்(24) உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 13 சவரன் தங்க நகைகள், மூன்று இருசக்கர வாகனங்கள், ஒரு ஆம்னி கார் மற்றும் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.