கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டிய தனியார் நிறுவனம் மற்றும் கடைகளுக்கு மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டிய தனியார் நிறுவனம் மற்றும் கடைகளுக்கு மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.23 ஆர்.எஸ்.புரம், டி.வி.சாமி சாலை பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் கடைகள் தங்களின் குப்பைகளை மாநகராட்சியால் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியில் போடாமல் சாலையோரங்களில் போடப்பட்டிருந்ததை மாநகராட்சி அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின்படி, மேற்கு மண்டல சுகாதார அலுவலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்படி இடங்களை நேரில் ஆய்வு செய்து, பொதுசுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000/-ம், மற்றும் மூன்று கடைகளுக்கு தலா ஐந்தாயிரம் வீதம் ரூ.15,000/-ம் ஆகமொத்தம் ரூ.25,000/-ம் அபராதம் விதிக்கப்பட்டு, கடைகள், வர்த்தக வணிக கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்களில் சேகரமாகும் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டக்கூடாது என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தினார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.23 ஆர்.எஸ்.புரம், டி.வி.சாமி சாலை பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் கடைகள் தங்களின் குப்பைகளை மாநகராட்சியால் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியில் போடாமல் சாலையோரங்களில் போடப்பட்டிருந்ததை மாநகராட்சி அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின்படி, மேற்கு மண்டல சுகாதார அலுவலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்படி இடங்களை நேரில் ஆய்வு செய்து, பொதுசுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000/-ம், மற்றும் மூன்று கடைகளுக்கு தலா ஐந்தாயிரம் வீதம் ரூ.15,000/-ம் ஆகமொத்தம் ரூ.25,000/-ம் அபராதம் விதிக்கப்பட்டு, கடைகள், வர்த்தக வணிக கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்களில் சேகரமாகும் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டக்கூடாது என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தினார்.