கோவையில் திருமணமான ஒரே வருடத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை..! ஆர்.டி.ஓ விசாரணை

கோவை: கோவை சித்தாபுதூர் அருகே திருமணமான ஒரே வருடத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை சித்தாபுதூர் அருகே திருமணமான ஒரே வருடத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை சித்தாபுதூர் அருகே உள்ள பி.கே.ஆர் வீதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி காயத்ரி (20). இவர்களுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்ற நிலையில், 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த காயத்ரி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர், தற்கொலை செய்து கொண்ட காயத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காட்டூர் போலீசார் 174 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...