கோவை: கோவை புரூக் பீல்ட்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மாலில் முகக்கவசம் அணியாமல் இருந்த வாடிக்கையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
கோவை: கோவையில் உள்ள பிரபல புரூக் பீல்ட்ஸ் மாலில் முகக்கவசம் அணியாமல் இருந்த வாடிக்கையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உள்ள பிரபல புரூக் பீல்ட்ஸ் மாலில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் இன்று(14.12.2020) ஆய்வு மேற்கொண்டு மாலில் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனரா என்று ஆய்வு செய்தார்.

அப்போது, முகக்கவசம் அணியாமல் இருந்த 6 வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் ரூ.400/-ம், முகக்கவசம் அணியாமல் இருந்த வாடிக்கையாளர்களை மாலிற்கு அனுமதித்தற்காக புரூக் பீல்ட்ஸ் மாலிற்கு ரூ.1000/-ம் அபராதமாக விதித்து மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, மத்திய மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உள்ள பிரபல புரூக் பீல்ட்ஸ் மாலில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் இன்று(14.12.2020) ஆய்வு மேற்கொண்டு மாலில் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனரா என்று ஆய்வு செய்தார்.
அப்போது, முகக்கவசம் அணியாமல் இருந்த 6 வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் ரூ.400/-ம், முகக்கவசம் அணியாமல் இருந்த வாடிக்கையாளர்களை மாலிற்கு அனுமதித்தற்காக புரூக் பீல்ட்ஸ் மாலிற்கு ரூ.1000/-ம் அபராதமாக விதித்து மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, மத்திய மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.