குன்னூரில் மலை ரயிலை மறிக்க முயன்ற விடுதலை கட்சியினர் கைது..!

நீலகிரி: பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குன்னூரில் இன்று, ஞாயிற்றுக்கிழமை மலை ரயிலை மறிக்க முயன்ற விடுதலை கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி: பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குன்னூரில் இன்று, ஞாயிற்றுக்கிழமை மலை ரயிலை மறிக்க முயன்ற விடுதலை கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.



மீண்டும், தெற்கு ரயில்வே சார்பில் மலை ரயிலை இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்த விடுதலை சிறுத்தை கட்சியினர், சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து, இன்று உதகை வந்த மலை ரயிலை குன்னூரில் மறிக்க முயன்றனர். இதனால் விடுதலை சிறுத்தை கட்சியினரை, காவல் துறையினர் கைது செய்தனர். 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை நீலகிரி மலை ரயில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளிடையே, மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த ரயிலுக்கு பாரம்பரிய சின்னம் என்று யுனெஸ்கோ சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக, கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக மலை ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. வழக்கம் போல் மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்குவது குறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில்், TN 43 என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மலை ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது வாரத்தி்ல், சனி மற்றும் ஞாயிறு என இரு நாட்களில் மட்டும் இயக்க திட்டமிட்டுள்ள அந்த, தனியார் நிறுவனத்தினரால் கடந்த 5 மற்றும் 6-ம் தேதி இரண்டு நாட்கள் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டது, அதில் உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை செல்ல பயணக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.3000 வசூல் செய்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

மேலும், எதிர்காலத்தில் இந்தக் கட்டணத்தை எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் வரை உயர்த்த தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரயில்வே நிர்வாகம், உதகை வரை பயணக் கட்டணமாக நூறு முதல் 500 வரை க்கும் மட்டுமே பெற்று வந்த நிலையில், தனியார் நிறுவனத்தின் கட்டணக் உயர்வை கண்டித்து பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. 

மேலும், மலை ரயிலின் பாரம்பரிய சின்னத்தை மறைத்து TN 43 என்ற அந்த தனியார் நிறுவனத்தின் பெயர் பலகையுடன், கடந்த வாரம் இயக்கப்பட்டதிற்கு கடும் விமர்சனம் எழுந்த நிலையில், இன்று அந்த ரயிலில் பெயர் பலகை மட்டும் அகற்றப்பட்டு, அதே கட்டணத்தில் இயக்கப்பட்டது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...