மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, கோவையில் போசியாவின் சார்பில் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம்..!

கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, கோவையில் போசியாவின் சார்பில் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, கோவையில் போசியாவின் சார்பில் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது: 

கடுமையான மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால் உற்பத்தித்துறை சார்ந்திருக்கின்ற அனைத்து தொழில் நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தி குறைத்துக் கொண்டு வருகின்றார்கள். இதனால், ஜாப் ஆர்டர்களை மட்டுமே நம்பி தொழில் செய்து வருகின்ற 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களும் அதைச் சார்ந்து இருக்கின்ற 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையும் தற்பொழுது கேள்விக்குறியாக மாற்றப்பட்டு வருகின்றன. 

தொடர்ச்சியாக, குறுந்தொழில் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட போதும் எவ்விதமான கடனும் கிடைக்கப்படாமல், கடன் சுமைகளால் திண்டாடி வரும் சூழ்நிலையில், தற்போது தொழிற்சார்ந்து இருக்கின்ற அனைத்து மூலப் பொருள்களின் விலை ஏற்றத்தால், ஏதோ கொஞ்சம் நம்பிக்கையோடு இருந்து வந்த குறுந்தொழில் முனைவோர்களுக்கு, மேலும் இந்த மூலப்பொருள் விலையேற்றம் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. 

என்ன செய்வதென்று அறியாத தொழில்முனைவோர்கள் தவித்து வருகின்றார்கள். மத்திய அரசு மூலப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த, உடனடியாக குறு, சிறு தொழில் முனைவோர்கள் உள்ளடக்கிய கமிட்டியை உருவாக்கிட வேண்டும். அதுபோல், கோவையில் செயில் கிடங்கை உடனடியாக திறந்திட வேண்டும். மூலப்பொருள்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுந்தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு தனி கடன் திட்டத்தை அறிவித்து, அவர்களோடு ஆண்டு கணக்கை கருத்தில் எடுத்துக் கொண்டு 25 சதவீதம் வரை சொத்துபினை இல்லாமல் கடன் வழங்கிட தனி திட்டத்தை அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை, முன்வைத்து வரும் 15 ம் தேதி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் தொழில் கூட்டமைப்பான போசியாவின் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் குறுந் தொழில் முனைவோர்கள் சங்கமான டாக்ட் பங்கேற்கிறது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...