கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ 24 மணிநேர குடிநீர் வழங்கும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ 24 மணிநேர குடிநீர் வழங்கும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ 24 மணிநேர குடிநீர் வழங்கும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்புரம்‌ திருவேங்கடசாமி சாலை, சா்சீவிராமன்‌ சாலை, மேற்கு சம்மந்தம்‌ சாலை, குருகோவிந்த்‌ சிங்‌ ரோடு, தடாகம்‌ ரோடு ஆகிய பகுதிகளில்‌ 24 மணி நநர குடிநீர்‌ வழங்கும்‌ திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ அவர்கள்‌, குடிநீர்‌ வழங்கும்‌ பணிகளுக்காக சாலைகளில்‌ குழாய்கள்‌ பதித்த பின்பு கசிவு ஏற்படாமல்‌ உள்ளதை உறுதி செய்த பின்பு, 24 மணிநேர குடிநீர்‌ பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சமன்‌ செய்து சீரமைக்க வேண்டும்‌. இந்தப்பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய பொறியாளா்களுக்கும்‌, சூயஸ்‌ நிறுவன ஒப்பந்ததாரர்களுக்கும்‌ அறிவுறுத்தினார்.



முன்னதாக மேற்கு மண்டலம்‌ கே.கே.புதூர்‌ மற்றும்‌ வார்டு எண்‌.22 சாய்பாபா காலனி பகுதியில்‌ மழைநீர்‌ வடிகால்‌ கால்வாயில்‌ குப்பைகள்‌ தேங்கா வண்ணம்‌ தூய்மைப் பணியாளர்கள்‌ கால்வாய்களில்‌ அடைக்கப்பட்ட குப்பைகளில்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ மேற்கொள்வதை ஆய்வு மேற்கொண்ட, ஆணையாளர்‌ அவர்கள்‌, பொதுமக்களிடம்‌ குப்பைகளை கால்வாய்கள்‌, சாலை ஓரங்களில்‌ கொட்டாமல்‌, மக்கும்‌ குப்பை, மக்கா குப்பை என தரம்‌ பிரித்து, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம்‌ வழங்கி, தங்கள்‌ பகுதிகளை தூய்மையாகவும்‌, சுகாதாரமாகவும்‌ வைத்திருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.



பின்னா்‌, வார்டு எண்‌.22 பாரதி பூங்கா, 5வது கிராஸ்‌ பகுதியில்‌ தூய்மைப் பணியாளர்கள்‌ வீடு வீடாக சென்று மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகளை வாகனங்கள்‌ மூலம்‌ ஏற்றிச்செல்லும்‌ பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர்‌ அவர்கள்‌, அப்பகுதி பொதுமக்களிடம்‌ சாலை ஓரங்களில்‌ குப்பைகளை கொட்டாமல்‌ குப்பைத்தொட்டிகளில்‌ மட்டுமே கொட்டி சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்‌ என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர்‌ (24x7 குடிநீர்‌ திட்டம்‌) பார்வதி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர்‌, உதவிப்பொறியாளா்‌ சத்தியமூரத்தி, திட்ட மேலாண்மை ஆலோசகர்‌ குழுத்தலைவர்‌ கோபாலகிருஷ்ணன்‌ மற்றும்‌ பணி மேற்பார்வையாளர்‌, மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...