காய்கறி கடைக்காரர்களுக்கும்‌ நன்றி சொல்லுங்கள் - ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு வேண்டுகோள்‌!

கோவை: “நீங்கள்‌ அடுத்த முறை எந்த கடைக்கு சென்றாலும்‌, அங்கு பணியாற்றும்‌ ஊழியர்களின்‌ சேவையை அங்கீகரிக்கும்‌ விதமாக அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்‌” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்‌.


கோவை: “நீங்கள்‌ அடுத்த முறை எந்த கடைக்கு சென்றாலும்‌, அங்கு பணியாற்றும்‌ ஊழியர்களின்‌ சேவையை அங்கீகரிக்கும்‌ விதமாக அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்‌” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்‌.

உலக சில்லறை வர்த்தக ஊழியர்கள்‌ தினமான இன்று (டிசம்பர்‌ 12) World Retail Employees day சத்குரு தனது டிவிட்டர்‌ பக்கத்தில்‌ வெளியிட்டுள்ள வீடியோவில்‌ கூறியிருப்பதாவது:

வணக்கம்‌, உலக சில்லறை வர்த்தக ஊழியர்கள்‌ தின வாழ்த்துக்கள்‌. ஆன்லைன்‌ வர்த்தகம்‌ என்பது பிரபலம்‌ அடைந்து வரும்‌ சூழலிலும்‌ சில்லறை வர்த்தக துறையின்‌ ஊழியர்கள்‌ பல வழிகளில்‌ நமக்கு சேவையாற்றி வருகிறார்கள்‌ என்பதை நாம்‌ மறக்க கூடாது. மளிகை பொருட்கள்‌ விற்பனையில்‌ தொடங்கி பல விஷயங்களை அவர்கள்‌ நமக்கு கிடைக்க உதவியாக உள்ளார்கள்‌.

இந்தியாவில்‌ 4.6 கோடி பேரும்‌, உலகம்‌ முழுவதுமாக சேர்த்து 50 கோடிக்கும்‌ அதிகமான ஊழியர்கள்‌ நம்‌ வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள்‌ நமக்கு கிடைப்பதை உறுதி செய்கின்றனர்‌. நம்முடைய சமூக, பொருளாதார சூழலில்‌ மிக முக்கிய பங்காற்றினாலும்‌, அதிகம்‌ கவனம்‌ ஈர்க்கப்படாமல்‌ இருக்கும்‌ இந்த வீரர்களுக்கு நாம்‌ உரிய அங்கீகாரம்‌ அளிக்க வேண்டும்‌.

நீங்கள்‌ அடுத்த முறை எந்த கடைக்கு சென்றாலும்‌, அவர்‌ தக்காளி, உருளை கிழங்கு போன்ற காய்கறிகளை விற்கும்‌ சிறு விவசாயியாக இருந்தாலும்‌ சரி அல்லது வேறு எந்த பெரிய கடைக்கு சென்றாலும்‌ சரி அங்குள்ள ஊழியர்களை பார்த்து புன்னகை செய்யுங்கள்‌, வணக்கமோ, நன்றியோ சொல்லி அவர்களின்‌ சேவையை அங்கீகரியுங்கள்‌. இது மிக மிக முக்கியமானது.

இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும்‌ அவர்கள்‌ தங்கள்‌ உயிரை பணையம்‌ வைத்து நமக்கு அனைத்து தளங்களிலும் சேவையாற்றி வருகிறார்கள்‌. அவர்களுக்கு என்னுடைய நன்றிகளையும்‌ வாழ்த்துக்களையும்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்‌.

இந்திய சில்லறை விற்பனையாளர்கள்‌ மற்றும்‌ சில்லறை வர்த்தக அமைப்புகளுக்கான அறக்கட்டளை சார்பில்‌ கடந்த 2011-ம்‌ ஆண்டு டிசம்பர்‌ 12ம்‌ தேதி உலக வர்த்தக ஊழியர்கள்‌ இனமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...