நீலகிரி: உதகையில் பிரதமர் மாேடியின் உருவ பொம்மையை எரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகளை போலீசார் குண்டுகட்டாக கைது செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி: உதகையில் பிரதமர் மாேடியின் உருவ பொம்மையை எரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகளை போலீசார் குண்டுகட்டாக கைது செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சார்பில் 8 மாதத்திற்குப் பின் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வரும் சிறப்பு ரயிலை மறிப்பதற்காக ரயில் நிலையம் முன்பு காத்திருந்தனர்.
பின்னர் மலை ரயில் வர தாமதமானதால் திடீரென பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக வேன்களில் ஏற்றி கைது செய்தனர்.

இதன் காரணமாக உதகை ரயில் நிலையம் மற்றும் அருகில் உள்ள பேருந்து சாலைகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சார்பில் 8 மாதத்திற்குப் பின் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வரும் சிறப்பு ரயிலை மறிப்பதற்காக ரயில் நிலையம் முன்பு காத்திருந்தனர்.
பின்னர் மலை ரயில் வர தாமதமானதால் திடீரென பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக வேன்களில் ஏற்றி கைது செய்தனர்.

இதன் காரணமாக உதகை ரயில் நிலையம் மற்றும் அருகில் உள்ள பேருந்து சாலைகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.