கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..! மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

கோவை: கோவையில் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்தது.

கோவை: கோவையில் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்தது. 

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் வயது (38), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சூரிய பிரபா (32), இவருக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஆகும். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

கடந்த ஆண்டு வேல்முருகன் தனது குடும்பத்துடன் கோவை வந்து கவுண்டம்பாளையம் என். எஸ். ஆர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஆனால், அவருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் வேல்முருகன் தனது இரண்டு குழந்தைகளையும் அங்குள்ள ஒரு ஆசிரமத்தில் சேர்த்து படிக்க வைத்தார். இதற்கிடையே, வேல்முருகனுக்கு அவருடைய மனைவி சூரிய பிரபா வுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, ஆத்திரமடைந்த வேல்முருகன் வீட்டில் கிடந்த கேபிள் ஒயரில் சூரிய பிரபாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவானார். 

இது குறித்த, புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே, கொலை நடந்த 10 நாட்கள் கழித்து மதுரை ஜெ.எம் இரண்டாவது கோர்ட்டில் வேல்முருகன் சரணடைந்தார். அவரை, பெநா.பாளையம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு விசாரணை கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மொத்தமாக, 18 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், கழுத்தை இறுக்கி மனைவியை கொன்ற வேல்முருகனுக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குணசேகரன் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் நாகராஜ் வாதாடினார்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...