கோவை: கோவையில் வேலை பார்த்த நிறுவனத்தின் பெயரில் போலியான ரசீது தயார் செய்து, பொருட்களை விற்பனை செய்து 75 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட நபர் கைது.
கோவை: கோவையில் வேலை பார்த்த நிறுவனத்தின் பெயரில் போலியான ரசீது தயார் செய்து, பொருட்களை விற்பனை செய்து 75 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட நபர் கைது.
கோவை ஆர்.எஸ் புரத்தில் வசிப்பவர் செந்தில்குமார் அவர் பியூர் இந்தியா என்ற பெயரில் தண்ணீர் சுத்திகரிப்பு உதிரிபாகங்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். அத்துடன் காட்டன் இந்தியா என்ற பெயரில் ஆண்களுக்கான துணி கடை நடத்தி வருகிறார்.
அவர் நிறுவனத்தில், கோவை துடியலூர் அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வசிக்கக்கூடிய வீரப்பெருமாள் (42), என்பவர் பல வருடங்களாக மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், வீரப்பெருமாள், அக்வா பியூர் என்ற பெயரில் தன்னுடைய முகவரியை பதிவு செய்து போலியான ரசீதை உருவாக்கி கடையில் உள்ள பொருட்களை விற்பனை செய்து 75 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து செந்தில்குமார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்படி, கோவை மாநகர கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து வீர பெருமாளை தேடிவந்தனர்.
இந்த நிலையில், நேற்று சாய்பாபா காலனி அலுவலகத்தில் வீரப்பெருமாள் இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் அலுவலகத்தை சுற்றி வளைத்து வீரப்பெருமாளை கைது செய்தனர். பிறகு, மோசடி வழக்கு பதிவு செய்து குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 7 நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை ஆர்.எஸ் புரத்தில் வசிப்பவர் செந்தில்குமார் அவர் பியூர் இந்தியா என்ற பெயரில் தண்ணீர் சுத்திகரிப்பு உதிரிபாகங்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். அத்துடன் காட்டன் இந்தியா என்ற பெயரில் ஆண்களுக்கான துணி கடை நடத்தி வருகிறார்.
அவர் நிறுவனத்தில், கோவை துடியலூர் அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வசிக்கக்கூடிய வீரப்பெருமாள் (42), என்பவர் பல வருடங்களாக மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், வீரப்பெருமாள், அக்வா பியூர் என்ற பெயரில் தன்னுடைய முகவரியை பதிவு செய்து போலியான ரசீதை உருவாக்கி கடையில் உள்ள பொருட்களை விற்பனை செய்து 75 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து செந்தில்குமார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்படி, கோவை மாநகர கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து வீர பெருமாளை தேடிவந்தனர்.
இந்த நிலையில், நேற்று சாய்பாபா காலனி அலுவலகத்தில் வீரப்பெருமாள் இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் அலுவலகத்தை சுற்றி வளைத்து வீரப்பெருமாளை கைது செய்தனர். பிறகு, மோசடி வழக்கு பதிவு செய்து குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 7 நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.