பொள்ளாச்சியில் மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள மெட்டுவாவி கிராமத்தில் மனைவி இறந்த துக்கத்தில், கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு உடல்களையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள மெட்டுவாவி கிராமத்தில் மனைவி இறந்த துக்கத்தில், கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு உடல்களையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள மெட்டுவாவி கிராமத்தில் கோத்தகிரியை சேர்ந்த தர்மராஜ் (27);என்பவர் குடும்பத்துடன் தங்கி விவசாயம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், சில தினங்களாக தர்மராஜின் மனைவி ரம்யாவிற்கு (25) உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மோசமடைந்த அவர் நேற்று இரவு உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கம் தாளாமல், தர்மராஜ், அதே இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த நெகமம் காவல் நிலைய போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...