பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் புரவி புயல் காரணமாக, இன்று காலை முதலே தொடர் மழை பெய்து வந்தது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் புரவி புயல் காரணமாக, இன்று காலை முதலே தொடர் மழை பெய்து வந்தது.
தொடர் மழை காரணமாக, காலையில் பணிக்குச் செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகினர். மாலை வரை பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
ஆழியாறு மற்றும் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கனமழை பெய்ததால் ஆழியாறு - வால்பாறை சாலை, பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிசிச்சோடி காணப்பட்டது.