வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட சோலையார் டேம் அருகில் இடதுகரை என்ற இடத்தில் கிருஷ்ணவேணி, ரவி தம்பதியின் வீட்டின் 10 அடி ஆழம் உள்ள கிணற்றில் ஒரு காட்டு மாடு விழுந்ததாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட சோலையார் டேம் அருகில் இடதுகரை என்ற இடத்தில் கிருஷ்ணவேணி, ரவி தம்பதியின் வீட்டின் 10 அடி ஆழம் உள்ள கிணற்றில் ஒரு காட்டு மாடு விழுந்ததாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தின், வன துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் வழிகாட்டுதலின் பெயரில், வனவர் விஷ்ணு தலைமையில் வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு சுமார் 12.15AM மணிக்கு விரைந்தனர்.
கிணற்றின் ஆழத்தில் இருந்த காட்டுமாட்டை மீட்பதற்காக, கிணற்றின் ஒரு புறம் பக்கவாட்டு சுவரை இடிக்கும் பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு, பின்பு காட்டுமாடு பத்திரமாக எவ்வித காயங்களும் இன்றி மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட காட்டு மாடு அதன் கூட்டத்தோடு இணைந்து அருகில் உள்ள வனப் பகுதிக்கு சென்றது.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு திறந்த வெளி கிணறுகளை மூடுமாறு வனத் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டது.
மீட்பு பணியில் வனக்காவலர், ராஜசேகர் அரவிந்த், வேட்டை தடுப்பு காவலர், ஜான் பால், மனோஜ்குமார், முருகேசன் ஈடுபட்டனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தின், வன துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் வழிகாட்டுதலின் பெயரில், வனவர் விஷ்ணு தலைமையில் வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு சுமார் 12.15AM மணிக்கு விரைந்தனர்.
கிணற்றின் ஆழத்தில் இருந்த காட்டுமாட்டை மீட்பதற்காக, கிணற்றின் ஒரு புறம் பக்கவாட்டு சுவரை இடிக்கும் பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு, பின்பு காட்டுமாடு பத்திரமாக எவ்வித காயங்களும் இன்றி மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட காட்டு மாடு அதன் கூட்டத்தோடு இணைந்து அருகில் உள்ள வனப் பகுதிக்கு சென்றது.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு திறந்த வெளி கிணறுகளை மூடுமாறு வனத் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டது.
மீட்பு பணியில் வனக்காவலர், ராஜசேகர் அரவிந்த், வேட்டை தடுப்பு காவலர், ஜான் பால், மனோஜ்குமார், முருகேசன் ஈடுபட்டனர்.