கோவை: கோவை அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் பகுதி வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் பாலப்பணிகள் துவக்க விழாவினை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.
கோவை: கோவை அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் பகுதி வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் பாலப்பணிகள் துவக்க விழாவினை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பாஜக கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 10 கி.மீ. பாலம் வேறு எங்குமே கிடையாது. கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்தப் பாலம் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது, என்று கூறினார்.

மேலும், பேசுகையில், எடப்பாடி பழனிசாமி பாசிட்டிவான முதலமைச்சர் எனவும் கிராமத்தில் இருந்து வந்து பல்வேறு நலத்திட்டங்களை அவர் மக்களுக்கு கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்யாரோ எழுதித் கொடுக்கும் அறிக்கைகளை பேசுகிறார், என்று கூறினார்.
எந்த திட்டத்தை அறிவித்தாலும், அதை குறை சொல்லிவரும் ஸ்டாலின் செய்வது எல்லாம் ஏமாற்று வேலை எனவும் திமுக மக்களுக்காக எதுவும் செய்யவில்லை, எனவும் அமைச்சர் வேலுமணி குற்றம்சாட்டினார்.
மேலும், மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலின் கைதேர்ந்தவர் எனவும் நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை ஸ்டாலின் அறிவிப்பார் என கூறிய அவர் மக்கள் இனி ஏமாறமாட்டார்கள் எனத் தெரிவித்தார். வரும், 2021 ல் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராவார் எனவும், அனைத்து தரப்பு மக்களும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள், எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பாஜக கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 10 கி.மீ. பாலம் வேறு எங்குமே கிடையாது. கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்தப் பாலம் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது, என்று கூறினார்.

மேலும், பேசுகையில், எடப்பாடி பழனிசாமி பாசிட்டிவான முதலமைச்சர் எனவும் கிராமத்தில் இருந்து வந்து பல்வேறு நலத்திட்டங்களை அவர் மக்களுக்கு கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்யாரோ எழுதித் கொடுக்கும் அறிக்கைகளை பேசுகிறார், என்று கூறினார்.
எந்த திட்டத்தை அறிவித்தாலும், அதை குறை சொல்லிவரும் ஸ்டாலின் செய்வது எல்லாம் ஏமாற்று வேலை எனவும் திமுக மக்களுக்காக எதுவும் செய்யவில்லை, எனவும் அமைச்சர் வேலுமணி குற்றம்சாட்டினார்.
மேலும், மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலின் கைதேர்ந்தவர் எனவும் நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை ஸ்டாலின் அறிவிப்பார் என கூறிய அவர் மக்கள் இனி ஏமாறமாட்டார்கள் எனத் தெரிவித்தார். வரும், 2021 ல் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராவார் எனவும், அனைத்து தரப்பு மக்களும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள், எனவும் அவர் தெரிவித்தார்.