கோவை: மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெறும் வரை, கோவையில் தொடர் மறியல் போராட்டம் நடத்த போவதாக, டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற இடதுசாரி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கோவை: மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெறும் வரை, கோவையில் தொடர் மறியல் போராட்டம் நடத்த போவதாக, டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற இடதுசாரி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

"வேளாண் விரோத சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் எழுச்சிகர போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் மத்திய மோடி அரசு போராட்டங்களை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து, நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட இயக்கங்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது", என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தின் முடிவாக, விவசாய விரோத மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும். போராடும் விவசாயிகளை அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும். அடக்குமுறைகளை ஏவி, விவசாயிகளை ஒடுக்க நினைக்காதே...! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் சார்பில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, டிசம்பர் 5 ஆம் தேதி பொள்ளாச்சியிலும், டிசம்பர் 7 அன்று அன்னூரிலும், டிசம்பர் 8 ஆம் தேதி கோவை, காந்திபுரத்திலும், டிசம்பர் 8 மேட்டுப்பாளையம், டிசம்பர் 9 சூலூர்பாப்பம்பட்டி பிரிவு மற்றும் சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் சிவசாமி, தேவராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கருப்பையா, என்.ஜெயபாலன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

"வேளாண் விரோத சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் எழுச்சிகர போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் மத்திய மோடி அரசு போராட்டங்களை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து, நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட இயக்கங்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது", என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தின் முடிவாக, விவசாய விரோத மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும். போராடும் விவசாயிகளை அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும். அடக்குமுறைகளை ஏவி, விவசாயிகளை ஒடுக்க நினைக்காதே...! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் சார்பில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, டிசம்பர் 5 ஆம் தேதி பொள்ளாச்சியிலும், டிசம்பர் 7 அன்று அன்னூரிலும், டிசம்பர் 8 ஆம் தேதி கோவை, காந்திபுரத்திலும், டிசம்பர் 8 மேட்டுப்பாளையம், டிசம்பர் 9 சூலூர்பாப்பம்பட்டி பிரிவு மற்றும் சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் சிவசாமி, தேவராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கருப்பையா, என்.ஜெயபாலன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.