திருப்பூர்: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 8வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் சார்பு நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 8வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் சார்பு நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.