கோவை சரகத்தில் 19 காவல் ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம்..!

கோவை: கோவை சரகத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பணி புரிந்து வந்த காவல் துறை ஆய்வாளர்கள் பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி நரேந்திர நாயர் இன்று அறிவித்துள்ளார்.


கோவை: கோவை சரகத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பணி புரிந்து வந்த காவல் துறை ஆய்வாளர்கள் பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி நரேந்திர நாயர் இன்று அறிவித்துள்ளார்.

இவர்களுக்கான இடமாற்ற உத்தரவு இன்று வழங்கப்பட்டுள்ளது.

அவர்களின் விவரம் வருமாறு:-

- கோவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த தேவராஜ் பேரூர் போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

- பேரூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சுகவனம், ஈரோடு பங்களாபுதூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

- ஈரோடு நம்பியூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த மகாலிங்கம், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

- தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரிந்து வந்த வெங்கடேசன், அன்னூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

- காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருமலைராஜன், நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீஸ் நிலையத்துக்கு இன்ஸ்பெக்டராக செல்கிறார்.

- ஈரோடு மாவட்டம் கோபியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரிந்து வந்த விஜயன், பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

- பொள்ளாச்சி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியன், திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக செல்கிறார்.

-பல்லடம் சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ரமேஷ் கண்ணன், ஆனைமலை போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

- நீலகிரி மாவட்டம் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த விஜயலட்சுமி, காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு இன்ஸ்பெக்டராக செல்கிறார்.

- ஈரோடு சென்னிமலை இன்ஸ்பெக்டர் செல்வராஜ், காரமடை இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

- விழுப்புரம் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜீவராஜ் மணிகண்டன், கோவில்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக செல்கிறார்.

- திருப்பூர்-ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் தவமணி, சிறுமுகை இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

- கோவை மாவட்டம் கோமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவகுமார், வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

- சேலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கோமதி, ஈரோடு மாவட்டம் சக்தி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்கிறார்.

-கன்னியாகுமரியில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கனிமொழி, நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை போலீஸ் நிலையத்திற்கு செல்கிறார்.

- சிவகங்கையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த அரங்கநாயகி, ஊட்டி ரூரல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்கிறார்.

- தர்மபுரியில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்ணன், ஈரோடு பவானி இன்ஸ்பெக்டராக செல்கிறார்.

- திருச்சி காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயதேவி, கோவை மாவட்ட ஏ.சி.டி.யூ இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

- ஈரோடு மாவட்டத்தில் காத்திருப்பு பட்டியலில் இருந்த சிவகுமார் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...