டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து 7வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகள் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய சூழ்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இன்று உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட விவசாயச் சங்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...