கோவை: கோவையில் பனிப்பொழிவு துவங்கி உள்ளது எனவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இதே சீதோஷ்ண நிலையே தொடரும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை: கோவையில் பனிப்பொழிவு துவங்கி உள்ளது எனவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இதே சீதோஷ்ண நிலையே தொடரும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக, வடகிழக்கு பருவமழை காலத்தின் இறுதியில் பனிப்பொழிவு துவங்கி, கோடை காலம் துவங்கும் போது நிறைவடையும். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி முதல் வாரம் வரை மட்டுமே பனிப்பொழிவு இருக்கும். அதன்பின், கோடை காலம் துவங்கி விடும். டிசம்பர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவதை பொறுத்து, பனிக்காலம் துவங்குவது தீவிரமடையும்.
அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரம் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வராததால், இரண்டாவது வாரத்திலிருந்து பனிப்பொழிவு துவங்கும். தொடர்ந்து, அடுத்த ஆண்டு, அதாவது பிப்ரவரி 2021 இறுதி வரை தொடரும் பனிப்பொழிவு தொடரும், என்று தமிழ்நாடு வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, வடகிழக்கு பருவமழை காலத்தின் இறுதியில் பனிப்பொழிவு துவங்கி, கோடை காலம் துவங்கும் போது நிறைவடையும். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி முதல் வாரம் வரை மட்டுமே பனிப்பொழிவு இருக்கும். அதன்பின், கோடை காலம் துவங்கி விடும். டிசம்பர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவதை பொறுத்து, பனிக்காலம் துவங்குவது தீவிரமடையும்.
அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரம் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வராததால், இரண்டாவது வாரத்திலிருந்து பனிப்பொழிவு துவங்கும். தொடர்ந்து, அடுத்த ஆண்டு, அதாவது பிப்ரவரி 2021 இறுதி வரை தொடரும் பனிப்பொழிவு தொடரும், என்று தமிழ்நாடு வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.