திருப்பூர்: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் இரண்டாவது நாளாக கையில் நாற்றுகளை ஏந்தியவாறு மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் இரண்டாவது நாளாக கையில் நாற்றுகளை ஏந்தியவாறு மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் நாற்றுகளை ஏந்தியவாறு இரண்டாவது நாளாக இன்று மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் நாற்றுகளை ஏந்தியவாறு இரண்டாவது நாளாக இன்று மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.