கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நடூர் ஏ.டி காலனி பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை ஒரு பங்களாவின் சுற்று சுவர் அருகிலிருந்த குடியிருப்புகளில் விழுந்ததில், குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நடூர் ஏ.டி காலனி பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை ஒரு பங்களாவின் சுற்று சுவர் அருகிலிருந்த குடியிருப்புகளில் விழுந்ததில், குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்ற சமூக நீதி கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக அஞ்சலி நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்த முயன்ற சமூகநீதி கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் 30க்கும் மேற்பட்டோர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
