கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஏ.டி.காலனி பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் சுற்று சுவர் அருகே உள்ள வீடுகளின் மீது இடிந்து விழுந்ததில், 17 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஏ.டி.காலனி பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் சுற்று சுவர் அருகே உள்ள வீடுகளின் மீது இடிந்து விழுந்ததில், 17 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவில், மேட்டுப்பாளையம், ஏ.டி காலனி பகுதியில் உள்ள அருக்கானி, சின்னம்மாள், உள்ளிட்ட நான்கு பேர் வீடுகளின் மீது, இந்த குடியிருப்பு அருகே உள்ள மாடி வீட்டின் 10 அடிக்கும் மேல் உள்ள ஒரு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரையை பறித்தது.
17 பேர் உடல் நசுங்கி, மண் மூடியும் உயிரிழந்த மூதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு இறந்தவர்களின் உறவினர்கள். அவர்கள் இறந்த இடத்தில் மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர். அப்பகுதிகுள், உறவினர்கள் தவிர அரசியல் கட்சியினர், பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.
இதையெடுத்து, அசம்பாவிதங்களை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தலைமையில் துணை தலைவர் நரேந்திரநாயர், மாவட்ட கண்காணிப்பாளர் அர.அருளரசு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனிதா உட்பட 1000 த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.