கோவை: கோவையில் சமீபத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கோவை சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர், பெண் தலைமை காவலர் உட்பட 6 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை: கோவையில் சமீபத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கோவை சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர், பெண் தலைமை காவலர் உட்பட 6 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காவலர்கள் அனைவரும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து, சரவணம்பட்டி போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு அங்கு கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சரவணம்பட்டி சத்தி சாலையில் உள்ள சோதனைச் சாவடி முன்பு தற்காலிக காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் அங்கு பெறப்பட்டு, மனுக்களின் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.