கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை விலை குவிண்டாலுக்கு ரூ.665 அதிகரித்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை விலை குவிண்டாலுக்கு ரூ.665 அதிகரித்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது குறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது, ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 361 மூட்டை கொப்பரைகளை நேற்று விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை தரம் பிரித்து அதிகாரிகள் ஏலமிட்டனர். முதல் தர கொப்பரை 195 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.11.550 -க்கும், அதிகபட்சம் ரூ. 13,010 -க்கும் விற்பனையானது. 2-ம் தர கொப்பரை 166 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ. 9,010 -க்கும், குறைந்தபட்சம் ரூ. 7,550 -க்கும் விற்பனையானது. 9 வியாபாரிகள், 69 விவசாயிகள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர்.
குவிண்டாலுக்கு, இந்த வாரம் ரூ.665 விலை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தை விட 29 மூட்டைகள் வரத்து குறைந்து காணப்பட்டது. மொத்தம், 173 குவிண்டால் ரூ.18 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது. ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் கொப்பரை உற்பத்தி கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்து உள்ளதால், வரத்து குறைந்து, விலை அதிகரித்து காணப்பட்டது, என்றார்.