நீலகிரி: உதகையில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க அதிநவீன தானியங்கி வாகன எண் பதிவு செய்யும் கேமராக்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் இன்று துவக்கி வைத்தார்.
நீலகிரி: உதகையில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க அதிநவீன தானியங்கி வாகன எண் பதிவு செய்யும் கேமராக்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் இன்று துவக்கி வைத்தார்.

சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டம் உதகையில் போக்குவரத்து விதி மீறல்களை தடுக்கும் வகையில் சேரிங்கிராஸ் சந்திப்பில் வாகன பதிவு எண் பதிவு செய்யும் கேமராக்கள் ஐந்து மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நான்கு என மொத்தம் ஒன்பது கேமராக்கள் காவல்துறை கண்காணிப்பாளர் இன்று துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து விதி மீறல்களையும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் இவை அனைத்தும் பைபர் கேபிள் இணைப்பு வழியாக மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
இதன் மூலம் சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் எண் தானியங்கி முறையில் எடுக்கப்பட்ட பின்னர் அவர்களின் முகவரிக்கோ அல்லது கைபேசிக்கு குறுஞ்செய்தி மூலமாக விதிமீறல்கள் தொடர்பான தகவல்கள் அனுப்பப்பட்டு அபராத தொகை நெட் பேங்கிங், SBI Payment Gateway மற்றும் ATM Card மூலம் ஆன்லைன் வாயிலாக செலுத்தும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இந்த அதிநவீன தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சாலை விதிமுறை மீறல் குற்றச் செயல்களை தடுக்கும் வகையிலும் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெறுமென மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டம் உதகையில் போக்குவரத்து விதி மீறல்களை தடுக்கும் வகையில் சேரிங்கிராஸ் சந்திப்பில் வாகன பதிவு எண் பதிவு செய்யும் கேமராக்கள் ஐந்து மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நான்கு என மொத்தம் ஒன்பது கேமராக்கள் காவல்துறை கண்காணிப்பாளர் இன்று துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து விதி மீறல்களையும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் இவை அனைத்தும் பைபர் கேபிள் இணைப்பு வழியாக மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
இதன் மூலம் சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் எண் தானியங்கி முறையில் எடுக்கப்பட்ட பின்னர் அவர்களின் முகவரிக்கோ அல்லது கைபேசிக்கு குறுஞ்செய்தி மூலமாக விதிமீறல்கள் தொடர்பான தகவல்கள் அனுப்பப்பட்டு அபராத தொகை நெட் பேங்கிங், SBI Payment Gateway மற்றும் ATM Card மூலம் ஆன்லைன் வாயிலாக செலுத்தும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இந்த அதிநவீன தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சாலை விதிமுறை மீறல் குற்றச் செயல்களை தடுக்கும் வகையிலும் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெறுமென மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.