திருப்பூர்: திருப்பூரில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட கணவரை உறவினர்கள் அடைத்து வைத்திருப்பதாகவும் அவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி தனது மகளுடன் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
திருப்பூர்: திருப்பூரில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட கணவரை உறவினர்கள் அடைத்து வைத்திருப்பதாகவும் அவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி தனது மகளுடன் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

திருப்பூர் கோவில்வழி பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருப்பூரில் திருமணம் நடந்துள்ளது.
அப்போது, தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை அநாதையென கூறி திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 2007ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில், திருப்பூரில் வேலை இல்லாத சூழலில் திண்டுக்கல்லுக்கு வேலைக்குச் சென்ற ராஜாவை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மேலும், தற்போது அவரை திருப்பி அனுப்பாமல் அடைத்து வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் தனக்கு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து தன்னை மீட்குமாறு அவர் கேட்டுள்ளதாகவும், இது குறித்து ஏற்கனவே காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கணவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பிரியா இன்று தனது மகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
திருப்பூர் கோவில்வழி பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருப்பூரில் திருமணம் நடந்துள்ளது.
அப்போது, தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை அநாதையென கூறி திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 2007ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில், திருப்பூரில் வேலை இல்லாத சூழலில் திண்டுக்கல்லுக்கு வேலைக்குச் சென்ற ராஜாவை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மேலும், தற்போது அவரை திருப்பி அனுப்பாமல் அடைத்து வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் தனக்கு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து தன்னை மீட்குமாறு அவர் கேட்டுள்ளதாகவும், இது குறித்து ஏற்கனவே காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கணவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பிரியா இன்று தனது மகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.