கோவையில் மனைவி, குழந்தைகளை பேருந்து நிலையத்தில் தவிக்க விட்டு மாயமான தொழிலாளி..! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் மனைவி, குழந்தைகளை பேருந்து நிலையத்தில் தவிக்க விட்டு மாயமான தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் மனைவி, குழந்தைகளை பேருந்து நிலையத்தில் தவிக்க விட்டு மாயமான தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூர்யா (27), ஓட்டல் தொழிலாளியான இவரது மனைவி ஜெனிதா மேரி (23). இவர்களுக்கு 4 வயது மகள், 2 வயது மகன் உள்ளனர். சூர்யா கடந்த சில மாதங்களாக கோவை கருமத்தம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலி செல்வதற்காக மனைவி குழந்தைகளுடன் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் வந்தார். குடும்பத்தினரை பஸ்ஸில் உட்கார வைத்த பின்னர் கடைக்குச் சென்று வருவதாக கூறிய சூர்யா, வெளியே சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் அவர் வரவில்லை.



இதையடுத்து, அவரது குடும்பத்தினர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. மேலும், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. கணவர் தவிக்க விட்டு சென்றதால் ஜெனிதா மேரி குழந்தைகளுடன் கதறி அழுதார்.

இதனை தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிங்காநல்லூர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சூர்யாவின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...