கோவையில் கடிதம் எழுதிவிட்டு மாயமான கல்லூரி பேராசிரியர்..! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் கடிதம் எழுதிவிட்டு மாயமான கல்லூரி பேராசிரியரை போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கடிதம் எழுதிவிட்டு மாயமான கல்லூரி பேராசிரியரை போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

சேலம் ஆத்தூரைச் சேர்ந்தவர் ராஜதுரைராஜ் (44). இவர் கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவரது செல்போனுக்கு, அவரது மனைவி ஜெயஸ்ரீ (30), கடந்த 13ம் தேதி பேச முயற்சி செய்தார். ஆனால், செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பலமுறை தொடர்பு கொண்டும் பேச முடியவில்லை.

இந்த நிலையில், 17ம் தேதி ராஜ துரைராஜ் ஜெயஸ்ரீக்கு கூரியரில் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் எனது குறிக்கோளை நோக்கிச் செல்கிறேன். என்னை தேட வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஜெயஸ்ரீ சேலத்தில் இருந்து கணவரைத் தேடி கோவை வந்தார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. ராஜதுரை ராஜ் வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார். பின்னர், இது தொடர்பாக ஜெயஸ்ரீ பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...