கோவை: வால்பாறையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட தலைவர் குணசேகரன் கொடியேற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் சுதாகரன் முன்னிலை வகித்தார்.
கோவை: வால்பாறையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட தலைவர் குணசேகரன் கொடியேற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் சுதாகரன் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் குணசேகரன், வால்பாறை பகுதியில் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரசின் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சியை வலுப்படுத்தும் விதமாக அனைத்து நிர்வாகிகளும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் கோவை மாவட்ட தலைவர் குணசேகரன் மாநில இளைஞரணிச் செயலாளர் சுதாகர், கவர்க்கல் ஜீவா, வெள்ளமலை கணேசன், வினோத் உட்பட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் குணசேகரன், வால்பாறை பகுதியில் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரசின் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சியை வலுப்படுத்தும் விதமாக அனைத்து நிர்வாகிகளும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் கோவை மாவட்ட தலைவர் குணசேகரன் மாநில இளைஞரணிச் செயலாளர் சுதாகர், கவர்க்கல் ஜீவா, வெள்ளமலை கணேசன், வினோத் உட்பட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.