கோவை: கோவையில் கடந்த ஆறு மாதங்களாக கேட்பாரற்று கிடந்த 160 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர்.
கோவை: கோவையில் கடந்த ஆறு மாதங்களாக கேட்பாரற்று கிடந்த 160 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர்.
கோவை மாநகரில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பல இடங்களில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை போலீசார் மீட்டு அது திருட்டு வழக்கில் சம்பந்தப் பட்டதா என்று விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை, பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூர், குனியமுத்தூர் காவல் நிலைய பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக கேட்பாரற்று கிடந்த 160 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டுள்ளனர். இந்த வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாத நிலையில், பொது ஏலத்தில் விட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகரில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பல இடங்களில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை போலீசார் மீட்டு அது திருட்டு வழக்கில் சம்பந்தப் பட்டதா என்று விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை, பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூர், குனியமுத்தூர் காவல் நிலைய பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக கேட்பாரற்று கிடந்த 160 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டுள்ளனர். இந்த வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாத நிலையில், பொது ஏலத்தில் விட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.