கோவை: கோவையில் புதுமண தம்பதியர் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் விதமாக மாட்டு வண்டியில் பயணம் செய்தது, பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
கோவை: கோவையில் புதுமண தம்பதியர் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் விதமாக மாட்டு வண்டியில் பயணம் செய்தது, பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

கோவை மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம்-சுமித்ரா ஆகியோருக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இன்று மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், மணமக்கள் குடும்பத்தினர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டவர்கள் என்பதால் தங்களது பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக மறுவீட்டிற்கு மாட்டுவண்டியில் செல்ல முடிவு செய்தனர்.
இதனையடுத்து, புதுமணத் தம்பதியினர் அரசிப்பாளையம் கிராமத்தில் உள்ள மணமகன் வீட்டுக்கு திருமண மண்டபத்தில் இருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டுச் சென்றனர்.
இது குறித்து புதுமண தம்பதிகள் கூறுகையில், விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் விதமாகவும், காங்கேயம் காளைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நோக்கில் மாட்டுவண்டியில் மறுவீடு சென்றதாக தெரிவித்தனர்.

கோவை மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம்-சுமித்ரா ஆகியோருக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இன்று மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், மணமக்கள் குடும்பத்தினர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டவர்கள் என்பதால் தங்களது பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக மறுவீட்டிற்கு மாட்டுவண்டியில் செல்ல முடிவு செய்தனர்.
இதனையடுத்து, புதுமணத் தம்பதியினர் அரசிப்பாளையம் கிராமத்தில் உள்ள மணமகன் வீட்டுக்கு திருமண மண்டபத்தில் இருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டுச் சென்றனர்.
இது குறித்து புதுமண தம்பதிகள் கூறுகையில், விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் விதமாகவும், காங்கேயம் காளைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நோக்கில் மாட்டுவண்டியில் மறுவீடு சென்றதாக தெரிவித்தனர்.