பொள்ளாச்சி: கடந்த செப்டம்பர் மாதம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட வால்பாறை ரோடு - கோட்டூர் பிரிவு பகுதியில், சொக்கலிங்கம் என்பவர் ஒரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, காட்டுபன்றி ஒன்று மொபட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.
பொள்ளாச்சி: கடந்த செப்டம்பர் மாதம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட வால்பாறை ரோடு - கோட்டூர் பிரிவு பகுதியில், சொக்கலிங்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, காட்டுபன்றி ஒன்று மொபட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்துக்கு வனத்துறையினால் வழங்கப்படும் ரூ.4 லட்சத்தில் இருந்து முதற்கட்டமாக ரூ.50ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிலையில், காட்டுபன்றி மோதி இறந்த சொக்கலிங்கத்தின் குடும்பத்திற்கு மீதமுள்ள நிவாரண தொகையான ரூ.3.50 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி, பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
வனக்கோட்ட துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் முன்னிலை வகித்தார். இதற்கு, வால்பாறை எம்எல்ஏ, கஸ்தூரிவாசு தலைமை தாங்கி, நிவாரண தொகையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கள இயக்குனரின் நேர்முக உதவியாளர் முரளிதரன், வனச்சரகர் புகழேந்தி, ஆனைமலை ஒன்றிய செயலாளர் சுந்தரம், சோமந்துறை சித்தூர் வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.