கோவையில் கொசுவர்த்தி சுருள் நெருப்பு சேலையில் பட்டு தீப்பிடித்ததால் மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு!

கோவை: கோவையில் கொசுவர்த்தி சுருள் நெருப்பு சேலையில் பட்டு தீப்பிடித்ததால் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் கொசுவர்த்தி சுருள் நெருப்பு சேலையில் பட்டு தீப்பிடித்ததால் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சாய்பாபா காலனி, நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (64), இவருடைய தாயார் அம்ச வாணி (82), இவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வந்தது. 

இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் தூங்கும் போது, அருகில் கொசுவர்த்தி சுருள் கொளுத்தி வைத்து படுத்து இருந்தார். அப்போது, கொசுவர்த்தி சுருள் தீப்பொறி அம்ச வாணி போர்த்தி இருந்த போர்வையில் பட்டு தீப்பிடித்தது. இதை அம்சவேணி முதலில் கவனிக்கவில்லை. 

இந்த நிலையில், போர்வை மற்றும் சேலை எரிந்து அவரது உடலில் தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த அம்சம் வாணியை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...