கோவை: கேரள மாநிலம் பாலக்காடு ஆலந்தூரை சேர்ந்தவர் கேசவன் (வயது 48), இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கோவை: கேரள மாநிலம் பாலக்காடு ஆலந்தூரை சேர்ந்தவர் கேசவன் (வயது 48), இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கேசவன் வீட்டில் உள்ளவர்களிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பாததால், அவர் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கேசவன் கோவை உக்கடம் பெரியகுளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை அவரது உடல் குளத்தில் மிதந்தது. அப்போது, அங்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் குளத்தில் உடல் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து பெரியகடைவீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குளத்தில் பிணமாக மிதந்த கேசவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து பெரியகடைவீதி போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல், சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள வாலங்குளத்தில் 55 (வயது) மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குளத்தில் பிணமாக மிதந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கேசவன் வீட்டில் உள்ளவர்களிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பாததால், அவர் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில், கேசவன் கோவை உக்கடம் பெரியகுளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை அவரது உடல் குளத்தில் மிதந்தது. அப்போது, அங்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் குளத்தில் உடல் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து பெரியகடைவீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குளத்தில் பிணமாக மிதந்த கேசவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து பெரியகடைவீதி போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல், சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள வாலங்குளத்தில் 55 (வயது) மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குளத்தில் பிணமாக மிதந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.