சென்னை: தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களை தவிர எஞ்சிய துறைகளில் பணிபுரிவோருக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களை தவிர எஞ்சிய துறைகளில் பணிபுரிவோருக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிவர் புயல் தொடர்பாக உதவிகளை மேற்கொள்ள சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:-
நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் எங்கெல்லாம் பாதிப்பு அதிகம் இருக்கும் என கருதப்படுகிறதோ அங்கெல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.
மேலும், நிவர் புயல் எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் புயலால் பாதிப்புகள் குறித்து நாளை தான் தெரிய வரும் என்றும் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிவர் புயல் தொடர்பாக உதவிகளை மேற்கொள்ள சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:-
நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் எங்கெல்லாம் பாதிப்பு அதிகம் இருக்கும் என கருதப்படுகிறதோ அங்கெல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.
மேலும், நிவர் புயல் எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் புயலால் பாதிப்புகள் குறித்து நாளை தான் தெரிய வரும் என்றும் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.